INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Thursday 30 November 2017

How to fix computer hardware and software problems ss



A high quality program that can cure bad sectors in hard drive. This system largely in a position to repair the logical problems, bodily issues, issues on the floor of the disc has a 60% probability of success. HDD Regenerator is a unique software program program for regeneration of hard disk drives. This system eliminates physical dangerous sectors on a hard disk drive surface. It doesn't conceal unhealthy sectors, it actually restores them!

Benefits Of HDD Regenerator

Hard disk drive is an integral part of every computer. It stores all your information. Probably the most ordinary defects of arduous drives is bad sectors at the disk surface. Unhealthy sectors are a part of the disk surface which accommodates not readable, however incessantly essential information. On account of bad sectors you may have problems to read and duplicate knowledge from your disk, your operating gadget becomes volatile and at last your computer could unable to boot altogether.

When a hard power is broken with unhealthy sectors, the disk no longer only becomes undeserving to be used, but in addition you threat shedding info stored on it. The HDD Regenerator can repair broken onerous disks without affecting or altering current data. In consequence, beforehand unreadable and inaccessible data is restored.

Supported file Systems

The product works completely at physical level. It ignores file system and can be used with FAT, NTFS or any other file system, and in addition with unformatted or unpartitioned disks. Throughout regeneration, the disk construction is not going to be modified and the prevailing information will not be affected.

As the product doesn't change the logical construction of a hard disk drive, the file system might contain marked earlier unhealthy sector labels, even when the onerous disk is already regenerated and never broken by bad sectors.

How to start HDD Regenerator

In an effort to begin the product, double-click the HDD Regenerator icon in your desktop or select the HDD Regenerator icon from the Start menu. Should you use the unregistered model, you may regenerate only one recoverable unhealthy sector. The main function of the unregistered demo model is displaying a report that accommodates details about the likelihood to regenerate your disk via the registered full version. The registered version fastidiously scans the laborious disk drive floor and regenerates all discovered recoverable unhealthy sectors.

To begin the regenerating process begin the HDD Regenerator Console Application. You can begin the Console Software immediately from Home windows** (the "Regeneration | Start Process below Home windows" menu) or create a bootable regenerating flash (the "Regeneration | Create Bootable Flash" menu) or create a bootable regenerating CD/DVD (the "Regeneration | Create Bootable CD/DVD" menu). After the flash or CD is created, boot your computer from this flash/CD and the Console Software will begin automatically under DOS.

HDD Regenerator can repair physical dangerous sectors brought on by magnetic errorson a hard drive surface. If the hard drive has a physical breakage (damagedheads, circuit board, etc.), then it is not going to be repaired by the product.

Sadly, the restore mode directly beneath Vista is not going to be efficient, you probably have only one exhausting drive on your Vista system. The reason is that HDD Regenerator requires exclusive entry to a tough drive underneath Vista. For apparent causes, the exclusive access cannot be obtained to the exhausting drive on which Vista OS is installed. That is associated to repair mode underneath Vista only. Scan mode does not require unique access to a drive. To acquire unique access to any laborious drive on any system, please use the Bootable Regenerating Flash or CD/DVD option.

 HDD Regenerator 1.71 Screenshots 

HDD Regenerator 1.71 Screenshot
HDD Regenerator 1.71 Screenshot
HDD Regenerator 1.71 Screenshot

How to Fix Bad Sectors in your Hard Disk


How to Fix Bad Sectors in your Hard Disk
  •  Free download the copy of Hiren's Boot CD 14.1 from the link below which is about 523MB
              http://www.hirensbootcd.org/download/
  • Extract the files to your Hard Drive.
  • Burn the "Hiren's BootCD 14.1.iso" image file to a CD with your favorite burning software's like Nero (or) you can click the "BurnToCD.cmd" file in the same folder for easy job.

SOLUTION :
1. Insert the "Hiren's BootCD 14.1" into your CD/DVD drive.
2. Boot the PC from your CD/DVD drive by setting priority in your bios menu.
3. Select the option "DOS programs" from the Hiren's dos menu. (my choice)


4. Enter the choice : 6 for Hard Disk Tools in the menu.

5. Enter the choice : 1 for HDAT2 4.53 (Test/Repair of Bad Sectors).

6. Now the HDAT2 program window will be opened and select your Hard Disk from the menu.

7. From the "Devices Test Menu" choose the option "Check and Repair Bad Sectors".

8. Now the repairing process will continue for about several minutes based on your Hard Disk size.

NOTE1 : Backup your data on your Hard Disk before repairing bad sectors.
NOTE2: Also read my post on How to recover data from bad sector Hard disks before fixing it.


Monday 27 November 2017

தமிழ்நாடு அரசு வெப்சைட்ஸ்

http://www.tnreginet.net/ தமிழ்நாடு பதிவுத்துறை

http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு

http://www.tnvat.gov.in/  தமிழ்நாடு வணிகவரித் துறை

http://trb.tn.nic.in/ தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணயம்

http://elections.tn.nic.in/ தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

http://www.tnpsc.gov.in/ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்

http://www.tn.nic.in/tnhome/tngov.html அனைத்து தமிழ்நாடு அரசு வெப்சைட் லிங்ஸ் ஒரே இடத்தில்

வாட்ஸ் அப்பின் ட்ரிக்ஸ்

வாட்ஸ் அப்பின் ட்ரிக்ஸ்
  • வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும்,  _  குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ‍ ‍‍~ குறியை சேர்த்தால் அடித்துக்காட்டப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கும்.


    • புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் போட்டோவை க்ரூப் அல்லது தனது நண்பருக்கு அனுப்பும் போது போட்டோவின் மேல் உள்ள எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை கொண்டு படத்தின் மேல் கைகளாலேயே வரைய, எழுத முடியும்.


    • Account > Privacy-யில் சென்று  ‘Read Receipts’ ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும் ப்ளூடிக் தெரியாது. 


    • (Group)க்ரூப்ல நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்க பேர @ சிம்பளுடன் டைப் செய்தால் போதும் அவரை அது சரியாக ஞாபகப்படுத்தும்.


    • Account > Privacy > Last Seen Timestamp ல‌ ’Nobody’ செலக்ட் செஞ்சுட்டா உங்களோட லாஸ்ட் சீன் யாருக்குமே தெரியாது. 

    பதிவு எழுதி பணம் சம்பாதிக்க இரண்டு தளங்கள்


    நல்ல எழுத்தாளர்கள் மற்றும் பதிவர்களின் தேவை இணையத்தில் அதிகமாக உள்ளது . பிளாக்கர் / வோர்ட்பிரஸ் போன்றவற்றில் பல வலைப்பூக்கள் இருதாலும் நல்ல பதிவுகள் கொஞ்சமாக தான் இருக்கிறது .பல பதிவர்கள் ஏற்கனவே பகிர்ந்ததை  தான் பதிவிடுகிறார்கள் மேலும் சிறந்த மற்றும் தனித்த பதிவுகளை பலரும் பகிருவதில்லை .சிலர் தங்களுக்கு என்று வலைப்பதிவு கூட இல்லாமல் பெரிய தளங்களில் விருந்தினர் பதிவு எழுதி பணம் ஈட்டுகின்றனர் . 
    இவர்களை Freelance Writer என அழைக்கின்றனர் . நாம் எழுதும் பதிவுகளை கொடுத்து பணம் சம்பாதிக்க பல தளங்கள் உள்ளன . பதிவு எழுதி பணம் ஈட்ட இரண்டு தளங்களை பார்க்க போகிறோம் .

    Breakstudios

    நாம்  எழுதிய பதிவை இங்கு Sumbit செய்ய வேண்டும் . பதிவு Approve செய்யபட்டால் உங்கள் பதிவை பப்ளிஷ் செய்வார்கள் . பணம் Paypal மூலம் உங்களுக்கு கொடுக்கப் படும் .

    தளத்தின் நிலவரம் :

    Alexa Rank: 1000 , Google PageRank: 6 ,Unique Visitors/ Month: 5.6 Million ,Page Views / Month: 97 Million 

    http://breakstudios.break.com/index/howitworks

    Wisegeek 

    பதிவு  எழுதி பணம் ஈட்ட இணையத்தில் சிறந்த இடம் . பல்வேறு தலைப்புகளில் இங்கு பதிவு எழுத முடியும் . உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் 10 முதல் 14$ வரை பணம் கிடைக்கும் .

    தளத்தின் நிலவரம் :

    Alexa Rank: 2439 Google PageRank: 6 ,Unique Visitors / Month: 4.2 Million .Page Views / Month: 20 Million

     http://www.wisegeek.com/freelance-writing-jobs.htm

    வலைப்பூக்கள் ஒரே தளத்தில்

    Friday 30 December 2016

    உங்கள் பழைய கம்ப்யூட்டர்ஐ HOMEFILE SERVERஆக மாற்றுங்கள்:


    உங்கள் பழைய கம்ப்யூட்டர்ஐ HOMEFILE SERVERஆக மாற்றுங்கள்:
    நாம் பயன்படுத்தும் பொருட்களில் எது பழசாகுதோ இல்லையோ, கைபேசியும் , கணினியும்பழசாகிவிடும், புதுப் புது வசதிகளும் கண்டுபிடிப்பும் தாங்க ​ இதுக்கு ​ ​காரணம்!!
    LAPTOP , NOTEBOOK , ULTRABOOK ன்னு ​சந்தைல  புது ​தொழில்நுட்பம்வருகையால பல வீடுகளில் DESKTOP PC பயனற்ற பொருளாக​க்  கிடக்கிறது.
    அப்படி ஒரு DESKTOP PC உங்க வீட்ல ​இருந்தாகவலை​ய விடுங்க, FREENAS என்ற புது OPERATING SYSTEM உங்க கம்ப்யூட்டர் ஐ ஒரு கணினி கட்டமைப்பு சார்த்த சேமிப்பு கருவியாக மாற்றிவிடும்.
    உங்க வீட்டுல இரண்டு , மூன்று கணினிகளோ அல்லது மடிக்கணினிகளோ இருந்தால் இந்த FREENAS File Server மிகுந்த பயன்மிக்கதாக இருக்கும்.

    • பொதுவான Firewall
    • பொதுவான BitTorrent Downloader
    • அனைத்து புகைப்படங்கள் , வீடியோக்கள் சேமித்து வைத்தல்
    • MP3 பாடல்களை இங்கு மட்டும் வைத்து அனைவரும் கேட்டுக்கொள்ளும் வசதி
    • போன்றவை FREENASஇன்  குறிப்பிடத்தகுந்த பயன்பாடுகள் ஆகும்.

    NAS உபயோகிக்க உங்கள் PCல் இருக்கவேண்டியவை:
    என்ன தான் பழைய கம்ப்யூட்டரில் இயங்கும் என்றாலும் சற்று தற்காலத்திய கம்ப்யூட்டரில் இதன் சேவை முழுமையாக பெற முடியும்.FREENAS, FREEBSDஐ சார்ந்தது, ஆதலால் FREEBSDஆதரிக்கும் எல்லா HARDWAREலிலும் இது இயங்கும்.
    32 BIT மற்றும் 64 BIT CPU ல் இயங்கும் இந்த FREENAS , ஆனால் 64 BIT CPU மிகவும் பொருத்தமானது, ZFS FILE SYSTEM உடன் இயங்க குறைந்தபட்சம் 8 GB RAM தேவைபடுகிறது, உங்களிடம் குறைவான RAM வசதிஅதாவது 2GB RAM இருந்தால் நீங்கள் UFS FILE SYSTEM பயன்படுத்தலாம்….
    FREENASஐ CD அல்லது USB ல் நிறுவு செய்வதன் மூலம் COMPUTERன் STORAGE​ஐ ​மிச்ச​ப் படுத்திகொள்ளலாம்.
    FREENAS ஐ இங்கு DOWNLOAD செய்யுங்கள்.
    http://web.freenas.org/download-freenas-release.html , அதை CD அல்லது USB ல் COPY செய்து உங்கள் COMPUTER ல் BOOT செய்யுங்கள்.
    FREENAS INSTALL செய்யும் முறை:
    freenas1
    உங்கள் COMPUTERல் FREENAS INSTALLERஐ BOOT செய்து பின்வரும் வழிமுறைகளை ஒன்றின் ஒன்று செய்துவாருங்கள்,
    • USB அல்லது CD ஐ உங்கள் COMPUTERல் சொருகுங்கள்,
    • INSTALLATION திறையில் INSTALL/UPGRADE என்று தேர்வுசெய்து, எந்த DRIVEல் சேமிக்க வேண்டும் என தேர்ந்தெடுங்கள்.
    நீங்கள் தேர்வு செய்த DRIVE ல் FREENAS OPERATING SYSTEM சேமிக்கப்படும், INSTALLATION நிறைவடைந்தது, உங்கள் CD மற்றும் USBகு இனி வேலை இல்லை.. அவற்றை நீக்கிவிட்டு உங்கள் COMPUTER ஐ மறு தொடக்கம் செய்யுங்கள்.
    freenas2
    FREENAS நிறுவுதல்:
    COMPUTER மறுதொடக்கம் ஆனவுLடன் கட்டுபாட்டு முனையம் திரை ​

    ​திறக்கும் ​, நீங்கள் இதிலிருந்தும் SETTINGS தேர்வுசெய்யலாம், அல்லது திரையின் அடியில் இருக்கும் URL ல் மற்ற COMPUTER ன் WEB BROWSER ல் இணைந்து FREENAS GRAPHICAL WEB INTERFACE ஐ பயன் படுத்தலாம்.
    (இப்பொழுது நீங்கள் MONITOR உடன் இருக்கும் இணைப்பை துண்டித்து விடலாம்)
    freenas3
    WEB INTERFACEல் பதிவி செய்ய தேவையான PASSWORDஐ FREENAS உடனடியாகத்​தேர்வு  செய்ய​ச்சொல்லும்,நினைவில் நன்கு பதித்து வைத்து கொள்ளும்படியான ​
    ​கடவுச்சொல்லை தேர்வு செய்யுங்கள்.
    freenas4
    இப்பொழுது நீங்கள் FREENAS சேவையைத்​தொடங்கும் WEB INTERFACE பார்க்கலாம்,
    இது தனிப்பயன் NAS கருவியில் இருப்பது போன்றேயாகும்.
    freenas5
    அடிப்படை NAS அமைப்பு:
    முதலில் நீங்கள் STORAGEஐ அமைக்கவேண்டும், TOOLBAR ல் உள்ள STORAGE ICONஐ கிளிக் செய்தால் STORAGE PANE திரை திறக்கும்,ZFS VOLUME MANAGER பயன்படுத்தி ZFS பிரிக்கலாம் அல்லது UFS VOLUME MANAGER பயன் படுத்தி UFS பிரித்து​ ​க்
    கொள்ளுங்கள்
    .freenas6
    SHARING PANE மூலம் தங்கள் புது தேக்கத்தை உங்கள் வலையமைப்பில் உள்ள மற்ற COMPUTERயுடன் பகிர்ந்து கொள்ளலாம், பலதரப்பான OS பலதரப்பான வரைமுறைகளை ஆதரிக்கும்,
    FREENAS உங்களை WINDOWS (CIFS), UNIX/LINUX(NFS) அல்லது APPLE (AFP) பரிமாற்றங்களுக்கு ​ஒத்துழைக்கிறது.
    நீங்கள் என்ன PROTOCOL பயன்படுத்தினாலும் ​இந்த தகவல் பரிமாற்றம், பிற தகவல் பரிமாற்றம் போன்றதே.
    உதாரணமாக நீங்கள் CIFS SHARE செய்யும் பொழுது தானாக WINDOWS EXPLORER அல்லது FILE EXPLORER வலையமைப்பில் தோன்றிவிடும்.

    மேலும் சில ​​சிறப்பம்சங்கள் :
    FREENAS பல சேவைகளை வழங்குகிறது , INTERGRATED USER TOOLS மூலம் யார்யாருக்கு எந்தfreenas7 தகவல் ​​பகிரலாம் , அல்லது அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைத்துக்கொள்ளலாம் FTP,RSYNC,SSH,DYNAMIC DNS போன்ற சேவைகளும் அவற்றில் சில…
    PLUGIN SCREEN மிகவும் சுவாரசியமாக உள்ளது , பல மூன்றாந்தரப்பு தொகுப்புகள் இதில் அடங்கும் , நீங்கள் TRANSMISSION BIT TORRENT CLIENT அல்லது PLEX MEDIA SEVER ஐ இங்கு INSTALL செய்து உங்கள் பழைய PCஐ ஒரு BIT TORRENT DOWNLOADER , NETWORK MEDIA SERVER மேலும் NAS ஆக பயன்படுத்தலாம்.

    freenas8உங்கள் பழைய COMPUTER ஐ மறுபடியும் உபயோகிக்க FREENAS சிறந்த வழியாகும்.

    ஜெட் வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய



    ஜெட் வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய நீங்களே செய்யக்கூடிய சிற்சில ட்ரிக்ஸ்கள்
    இன்றை நவீன தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற இக்க‍ட்டான
    சூழ்நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில் ஒரு வருடத்தில் 350 நாட்கள் BSNL Broad Band சொதப்பும். மற்ற நாட்களில் ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அந்த 5 நச் நாட்கள் வர்தா புயல் சமயத்தில் வந்ததுதான் அதிசயம். மற்ற “ஸ்பீடு” Broad Band இன்னும் ’I am Back’ முழுமையாக சொல்ல முடியாமல் தவிக்கின்றன. எந்த சூழல் என்றாலும் Wi-Fi சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசு களின் எவர்க்ரீன் பிரச்னை. இந்த ட்ரிக் ஸைஎல்லாம் ஃபாலோபண்ணா, உங்க Wi-Fi ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும்.
    *அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயி லை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனா விற்குபின்னால் நிறுத்திவையுங்கள். சூப்பர்சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் 2 ஆன்டெனாக்க ளையும் செங்குத்தாக வையுங்கள்.
    *ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்ட ராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இட மாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தா லும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இரு ந்தால் இன்னும் விசேஷம்.
    *ரெளட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கு ம். பக்கத்துவீட்டு ரெளட்டரிடம்இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.
    *சில இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் நீங்கள் உபயோகிக்காத சமயங்களிலும் இணையத்தை பயன்படுத் திக்கொண்டிருக்கும். அதையெல்லாம்முறையாக மூடவேண்டியது அவ சியம். இல்லையேல், கணிசமான பேண்ட்விட்த்தை அவை எடுத்துக் கொண்டு வேகத்தை குறை த்து விடும்
    * அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும் அதிக பயன்தர க்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்ச னைகள் தன்னா லேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.

    *உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டிங்கிற்கு மாற்றுங்கள். காரணம் WEP நெட் வொர்க்கை எளிதாக ஹேக்செய்ய இயலும். யாருக்கு தெரியும்? பார்க்க பால்வாடி பையன் போல இருக்கும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரரே பெரிய ஹேக்கராக இருக்கலாம்
    * இது ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான். அவ்வ ப்போது உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி க்கொண்டே இருங்கள். மொக்கையாக உங்கள் பெயரையே பாஸ்வேர்டாக வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர் பொங்கல் கொண்டாடிவிடுவார்.

    *இது எதுவுமே வேலைக்கு ஆகாவிட்டால் பேசா மல் ஒரு ரிப்பீட்டர் வாங்கி மாட்டி விடுங்கள். ரெளட்டரின் ரேஞ்ச் 150மீட்டர்கள். ரிப்பீட்டர் அந் த ரேஞ்சை அதிகரித்து சிக்னலை பல மடங்கு பூஸ்ட்செய்யும். நம்பி வாங்குங்க. கொடுத்த காசுக்கு நல்ல எஃபெக்ட் இருக்கும்

    ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன...??


    ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன...??
    1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

    2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு

    3. நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு

    4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்

    5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்

    விலங்கிடலாமா..?

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.

    கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது


    கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்..

    கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும்.

    கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

    குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

    கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்...

    1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

    2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

    3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

    4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

    5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

    6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

    7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

    8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

    நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

    முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் !

    இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

    அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.

    சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால்
    அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

    நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

    பிறந்த குழந்தை முதல்,  முதியவர் வரை நுகர்வோர் என்ற தகுதி பெறாதவர் எவரும் இல்லை. எனவே, நுகர்வோரான நாம் நமது உரிமைகளை அறிந்திருப்பதும் , அந்த உரிமைகள் மீறப்படும்போது என்ன செய்வது என்ற தெளிவைப் பெற்றிருப்பது அவசியம்.

    ஒவ்வொரு நாடும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன.

    நுகர்வோர் பிரச்சினைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் விரைவாக, அதிக செலவில்லாமல் தீர்வும், நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்கிறது.

    சரியான வரையறையின்படி, நுகர்வோர் என்பவர் யார்? அதை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.  



    நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ அதற்குரிய முழுத்தொகையைக் கொடுத்துப் பெறுபவர், அதற்குரிய விலையில் ஒரு பகுதியை செலுத்தி, மற்றொரு பகுதியை பின்னர் தருவதாகக் கூறிப் பெறுபவர், பணம் தருவதாகச் சொல்லியோ அல்லது தவணை முறையில் செலுத்தியோ பெறுபவர் எவரும் நுகர்வோர் ஆவார். மேலும் பொருளையோ அல்லது சேவையையோ தான் பணம் கொடுத்து வாங்காமல், அதை மேற்கூறிய முறையில் வாங்கியவரின் முறையான அனுமதியோடு பயன்படுத்தும் நபரும் நுகர்வோர் ஆவார்.

    சுருங்கச் சொன்னால், பொருள், சேவை இரண்டுக்கும் பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும்.

     உற்பத்தியாளர் மற்றும் விற்பனை நோக்கத்துடன் கொள் முதல் செய்யும் வியாபாரிகள், சேவை அளிப்போர் நுகர்வோர் ஆகமாட்டார்கள். ஆனால் சுயவேலைவாய்ப்புக்காக, தமது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக பொருட்களை வாங்கும் நபர்கள் நுகர்வோர் ஆவார்கள். உதாரணத்துக்கு ஒரு பெண் தனது சுயதொழிலுக்காக தையல் எந்திரம் வாங்குவது.

    சரி, நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

    * உயிருக்கும், உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சந்தைப்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

    * நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரநிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

    * பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை.

    * நுகர்வோரின் குறைகளைக் கேட்பதற்கும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.

    * நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை.

    * நுகர்வோருக்கான விழிப்புணர்வைப் பெறும் உரிமை.

    * நுகர்வோர், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.



    தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

    இணைய நூலகங்கள்

    பயன்மிகு இணையவழிச் சேவைகள்

    இணைய நூலகங்கள்

     நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள்.
    இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள்  நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும்   நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

    இணைய ஆவணகம்( Internet Archive : Digital Library )
    Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். இந்நூலகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், திரைப்படங்கள், மென்பொருட்கள், பத்திரிகைகள், பாடல்கள்,லிப்ரி வாக்ஸ் ( LibriVox)  ஒலி நூல்களின் தொகுப்பு, நுண் படங்கள் ( Micro film)என அனைத்தும் கிடைக்கின்றன.
     இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள்,நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.
    இந்நூலகத்தை கீழ்காணும் சுட்டியில்  பயன்படுத்தலாம்.
     இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை பல வடிவங்களில் ( format ) பெறலாம். Pdf, zip file, torrent, epub  என பல வடிவங்களில் தரவிறக்கம் செய்யும் வசதியும் கிடைக்கிறது.

    திறந்த நூலகம் ( Open Library )
    Open Library  என்றழைக்கப்படும் திறந்த நூலகம் பல பொது தளங்கள் மற்றும் இப்போது அச்சில் இல்லாத பல பழைய நூல்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.
    திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது.  யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.
    இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம்.புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம்.
    திறந்த நூலகம் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்களை தருகிறது. இந்நூலகத்தில் இருக்கும் நூல்கள் பயனர்களின் தேவைக்கேற்ப பல கோப்பு வடிவங்களில் ( file formats ) கிடைக்கிறது.
    PDF, Plain text, ePub, DjVu, Kindle, DAISY ஆகிய கோப்பு வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. இதில் DAISY என்பது Digital Accessible Information SYstem என்பதைக் குறிக்கின்றது. எண்ணிம ஒலி  நூல்கள், வார மற்றும் மாத பத்திரிகைகள் இவற்றை வாசிக்க இம் மென்பொருள் பயன்படுகிறது. DAISY அச்சுப் பிரதிகளுக்கு மாற்றாக கிடைக்கும் ஒலிக் கோப்புகள் ஆகும். இது பார்வையற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.
    இந்நூலகத்தினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பயன்படுத்தலாம்.

    சென்னை  நூலகம்  
    திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம் ஆகும். இந்நூலகம் வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் ( Gowtham Web Services ) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். இந்நூலகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கிடைக்கின்றன. உறுப்பினர்களாக இணைவோருக்கு இந்நூலகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை pdf கோப்புகளாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை  20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
    இந்நூலகத்தில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை கீழ்காணும் வலைப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
    இந்நூலகத்தின் இணையதள முகவரி

    நூலகம் திட்டம்  (noolaham.org) :
    நூலகம் திட்டம் ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ கூட்டுழைப்பாகும்.
    இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் எவர் வேன்டுமானாலும், எந்த நூலை வேண்டுமானாலும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக,  மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும்.
    இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன.
    இந்நூலகத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

    மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு  திட்டம் ( Project Madurai ):
    உலகளாவிய தமிழர்கள் இணையத்தின் வாயிலாக ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி, உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்கும் சேவை முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ஆகும்.
    இத்திட்டத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களது பங்களிப்பை வழங்கலாம். தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து தரவேற்றலாம். புதிதாக தரவேற்றப்பட்டுள்ள நூல்களை ஒப்பச்சு ( Proof Read ) செய்தும் நம் பங்களிப்பை இந்நூலகத்துக்கு வழங்கலாம்.
     இத்திட்டத்தின் வாயிலாக பல இலக்கண இலக்கிய நூல்களையும் நாம் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
    இத்திட்டத்தினை  கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
    இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
    புத்தகங்களை  pdf   கோப்புகளாகவும், Unicode, TSCII  எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.

    தமிழ் இணைய கல்விக்கழகம் ( Tamil Virtual University) :
    தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன.
     சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.
    இந்நூலகத்தில் பால்ஸ் அகராதி (Pal’s dictionary ), ஆங்கிலம் தமிழ் அகராதி,சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி என்று பல அகராதிகள் கிடைக்கின்றன.
    நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்று பல சேவைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.
    இணைய கல்விக் கழகத்தின் நூலகத்தினை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.
    செய்யுட் பாடல்கள், பாடல்களுக்கான உரைகள் என அனைத்தும் தெளிவாக, பயனாளர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

    திறந்த வாசிப்பகம் ( Open Reading Room):
      தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக இணையத்தில் செயல்படும் நூலகம் திறந்த வாசிப்பகம் ஆகும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் பயனாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. நாளும் புதிதாக நூல்கள் பலவும் தரவேற்றம் செய்யப் படுகிறது.
    இத்திட்டம் சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. இரமேஷ் சக்ரபாணி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
      திறந்த வாசிப்பகத்தினை கீழ்காணும் இணைய பக்கத்தில் காணலாம்.

    பிரித்தானிய தமிழ் நூற்சேகரம், தமிழ் மரபு அறக்கட்டளை:
     பிரித்தானிய தமிழ் நூற்சேகரம் என்கிற இத்திட்டம் பிரித்தானிய நூலகங்களும், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
    அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்சமயம் பத்து நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.இத்திட்டம் இந்திய மின் நூலகம் (Digital Library of India), மதுரை திட்டம் (Project Madurai), Million books project,TADILNET ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவில்  பல தமிழ் ஆவணங்கள், அரிய பழைய தமிழ் நூல்களும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
    தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவினை கீழ்க்காணும் இணைய முகவரியில்  பார்த்து பயன் பெறலாம்.
    தமிழ் மரபு நூலகத்தின் வலைப்பூவினை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.

    தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகம் :
       தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகத்தில் தமிழகம் வலையின் மின் வெளியீடுகளாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நூல்கள், பெரியாரின் நூல்கள், மார்க்ஸிச நூல்கள், பல எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்களும் கிடைக்கின்றன.
    இணையத்தில் இயங்கும் இன்ன பிற தமிழ் எண்ணிம நூலகங்களுக்கான இணைப்புகளும், நூல் விற்பனைத் தளங்கள் மற்றும் நூல் தரவு தளங்களுக்கான இணைப்புகளும் கிடைக்கிறது.

    தமிழகம் வலை வழங்கும் நூலகத்திற்கான இணைப்பு இதோ

    இலவச தமிழ் மின்னூல்கள் :
     மின் புத்தகங்களை படிக்க இன்று பல வகையான கருவிகள் கிடைக்கின்றன. அமேசான் (Amazon), பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble), புக்கீன் (Bookeen), எக்டாகோ (Ectaco), கோபோ (Kobo), பாக்கெட் புக் (Pocket Book) போன்ற நிறுவனங்கள் வழங்கும் இக்கருவிகளில் பயன்படுத்த ஏதுவாக மின் புத்தகங்களை வடிவமைத்து வழங்கும் தளம் தான் FTE ( Free Tamil Ebooks).
      பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து சேமிக்க பல திட்டங்கள் செயல்படுகின்றன. புதிதாக தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்களை  மின்னூலாக்கம் செய்து அந்நூல்களை Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படும் போது, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கான உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றது. அதே வேளையில், அப்புத்தகங்களை எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
     இதன் மூலம் புதிதாக வெளியாகும் தமிழ் புத்தகங்களை நாம் எளிதாக பெறலாம்.
     இலவச தமிழ் மின்னூல்களை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

    கூகுள் புத்தகங்கள் : 
    கூகுள் நிறுவனம் வழங்கும் சேவை கூகுள் புக்ஸ் ஆகும். இத்தளத்தில் தமிழ் புத்தகங்களும் கிடைக்கின்றன.  இச்சேவையை கீழ்காணும் தளத்தில் பெறலாம்.
      கூகுள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால், கீழ்காணும் கூகுள் ப்ளே பக்கத்தில் சென்று தரவிறக்கி, நமது மின்னஞ்சல் சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

    Tuesday 27 December 2016

    AIRTEL FREE INTERNET HACK UNLIMITED

    AIRTEL FREE INTERNET HACK UNLIMITED


    Hello Friends We are going to share you this trick with which you can browse and download for free using Airtel sim card.

    For this you need to Download a Software Called Cproxy.

    You Can Download It From here  


    Now you need to register on Cproxy From here  


    Now you dont have to do anything:

    Just Fill Up Your Registration Data as Shown and choose you server as Prague-CZ,UDP:9201

    Now restart your Software.
    Now Connect you PC using airtelgprs.com and start Cproxy. Wait till it gets connected And now You are Free To browse And Download.

    IDM ( Internet Download Manager) Configuration:

    Go to proxy / socks
    Tick on proxy
    Fill As:
    Proxy server address: 127.0.0.1
    Port: 3128
    Mark http , https , ftp.

    Now You Are Free to download Using IDM.


    IMP: One Trail account will remain active for three days. And You can create one account with one email only.
    Solution for this is to create account on hotmail and then use hotmail aliases to create 5 aliases. Now you have total of 6 addreses on one account . So 18 Days. Create Multiple Hotmail Accounts.And Enjoy :)

    Saturday 16 July 2016

    பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள்



    பங்குச்சந்தை பற்றிய எனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியதில்
    எனக்கு நிறைய நண்பர் வட்டாரமும் வரவேற்பும் கிடைத்தது. பல வாசகர்கள்
    பங்குச்சந்தை குறித்த அடிப்படையும் எவ்வாறு அதில் ஈடுபடுவது என்றும்
    கேள்வி கேட்டிருந்தார்கள். அதனாலே தொழில்நுட்பம் தவிர்த்த இப்பதிவு
    எழுத வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் நண்பர்கள் இதையும் படிப்பார்கள்
    என்ற
    நம்பிக்கை எனக்கு இருக்கிறது
    .

    1. பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
    :

    முதலில்
    செய்ய வேண்டியது பங்குசந்தையை பற்றி நீங்கள் ஓரளவாது
    புரிந்து கொள்ள வேண்டும். பங்குசந்தையை ஒரே நாளில் கரைத்து குடித்து விட
    முடியாது. எனவே கொஞ்சம் கொஞ்சமாய் படித்தோ உங்கள் நண்பர்களிடம்
    பேசியோ கற்றுக்கொள்ளுங்கள்.
    ஆன்லைனில் படிக்க ஒரு நல்ல தளம் தமிழில் உள்ளது. எளிமையான
    நடையில் பங்குசந்தையை பற்றிய நல்ல விளக்கங்களுடன் உள்ளது. இந்த
    தளத்தை பார்வையிட்டு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
    http://pangusanthai.com/


    எனக்கு
    தெரிந்து ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது. சோம. வள்ளியப்பன் என்ற நிபுணர் எழுதிய "அள்ள அள்ளப்பணம் " என்ற புத்தகம் தான் அது. எளிமையான நடையில் புரியக்கூடிய சொற்களிலும் ஆர்வம் கூட்டக்கூடிய விறுவிறுப்பிலும் எழுதியுள்ளார்.இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்தது விட்டன. நீங்கள் ஆரம்பத்தில் முதல் இரண்டு பாகங்களை படித்தால் மட்டும் போதும். விலையும் குறைவு தான் . ஒவ்வொரு பாகமும் 100 ரூபாய் தான்.இந்த புத்தகத்தின் குறிப்பும் ஆன்லைனில் வாங்குவதற்கும் பார்க்க :
    http://thoughtsintamil.blogspot.com/2005/01/blog-post_04.html
    இந்த புத்தகத்தை பற்றிய மோகன் என்பவரின் சுவராஸ்யமான அனுபவத்தை படிக்க : http://blog.mohandoss.com/2007/10/blog-post_29.html
    2. Pan card பெறுதல் :
    PAN Card பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

    அடுத்தது நீங்கள் PAN Card ( Permanent Account Number ) வருமான வரி எண்
    அட்டை பெற வேண்டும். இது இல்லாமல் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இதற்கு மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள UTI Mutual Fund அலுவலகத்திலோ அல்லது UTI PAN Services அலுவலகத்திலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஊரில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்றால் AXIS வங்கியில் சென்று விசாரித்தால் சொல்லி விடுவார்கள். Pan Card இன் மாதிரி வடிவம் கீழே உள்ளது. அரசு நிர்ணயத்த விலை 94 ரூபாய் ஆகும். ஆனால் ஒவ்வொரு இடத்தில 20 ரூபாய் அதிகமாக கேட்பார்கள். கொடுத்து விடுங்கள். அதே அலுவலகத்தில் உட்கார்ந்து நிரப்பி கொடுத்து வரலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்.

    தேவையான சான்றுகள் :

    1. ஒரு 2.5 width X 3.5 height inch புகைப்படம்
    2. இருப்பிட முகவரி உள்ள சான்று ( Eg. Ration card )
    3. உங்கள் புகைப்படம் உள்ள சான்று ( Voter Identity or Driving license )


    இதை நீங்கள் ஆன்லைனில் கூட விண்ணப்பிக்கலாம்.
    https://tin.tin.nsdl.com/pan/index.html

    இந்த தளத்திற்கு சென்று New Pan என்பதை தேர்வு செய்தால் ஒரு அறிவுரை படிவம் (Guidelines ) வரும். அதில் கீழே பார்த்தால் Category என்பதில் உங்களுக்கு என்றால் Individual தேர்வு செய்யுங்கள். நிறுவனம் என்றால் company என்று தேர்வு செய்து விட்டு பின் வரும் படிவத்தை கவனமாக நிரப்பவும். அதற்கு முன் நீங்கள் அறிவுரையை படித்திருந்தால் நல்லது. இதை நிரப்பும் முன்பு ஆன்லைன் என்பதால் 94 ரூபாய்க்கு "NSDL - PAN" என்ற பெயருக்கு Demand draft அல்லது
    Cheque எடுத்து கொள்ளவும்.


    3. பங்குசந்தைக்கான டீமேட் மற்றும் டிரேடிங் ( Demat & Trading Account )
    கணக்கு
    தொடங்குதல் :

    டீமேட் மற்றும் டிரேடிங் பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

    நமது நாட்டில் இரண்டு பங்குசந்தைகள் உள்ளன. BSE( Bombay stock exchange) மற்றும் NSE.(National stock exchange ). இவற்றில் நீங்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய முடியாது. அதனால் பங்குசந்தையால் அங்கீகரிக்கப்பட்ட பங்குதரகர்களிடம் ( Stock Broker ) தான் நாம் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்ய முடியும். அதற்கு முறைப்படி பதிவு செய்யப்பட்ட பங்குத்தரகு நிறுவங்களிடம் நாம் கணக்கு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இவர்களை Depository participants சுருக்கமாக DP என்றும் சொல்லலாம்.

    உங்கள் ஊரிலேயே பல நிறுவனங்கள் செயல்படலாம். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருந்தால் அவர்களை வைத்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.
    இங்கே தொடங்கப்படும் கணக்கு Demat & Trading என்று அழைக்கப்படும்.

    Trading Account - நீங்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் உள்ள கணக்கு.
    Demat Account - பங்குச்சந்தையில் ஈடுபட உங்களது அங்கீகார கணக்கு.

    இதை ஆரம்பிக்க ஆகும் செலவு ரூபாய் 450 ஆகும். கணக்கு தொடங்கும் போது
    உங்களுடைய கையெழுத்தை நிறைய இடங்களில் போட வேண்டும். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இன்னொரு விஷயம்
    Power of Attorny என்று ஒரு படிவம் இருக்கும். அதையும் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நீங்கள் நேராக வந்து தான் பங்குகளை வாங்கவும்
    விற்கவும் என்றில்லை. தொலைபேசியில் சொன்னாலே போதும்.

    தேவையான சான்றுகள் :

    1. Pan card
    2. Ration card
    3. Bank Passbook


    தொடர்புடைய பதிவு :
    பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

    பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

    பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்




    பங்குச்சந்தை என்றாலே நிறைய பேர் அது ஆபத்தான விஷயம் என்று
    ஒதுங்கி விடுகிறார்கள். எனக்கும் சில வருடங்களாகவே பங்குச்சந்தையில்
    பணத்தைப்போட்டு நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
    லாபம் வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்
    என்ற ஆசை அதிகமிருந்தது.

    எனவே Pan Card ( நிரந்தர வருமானக் கணக்கட்டை ) விண்ணப்பித்து வாங்கியும்
    Appllo Sindhuri என்ற தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கு ( Demat Account - பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள கணக்கு ) ஆரம்பித்து வெகு நாட்களாய் பணம் போடாமல் இருந்தேன். இந்த வருட தொடக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை அதல பாதாளத்தில் குறைந்தபோது நாம் இப்போதாவது முதலீடு செய்வோம் என்று முடிவெடுத்தேன். சிலரோ சத்யம் நிறுவனம் பட்டியலில் இருந்தே தூக்கப்படும் என்று பயமுறுத்தினர்.

    இருந்தாலும் எதோ ஒரு சிறு நம்பிக்கையில் ஜனவரி 23 அன்று வாங்கி விட்டேன்.
    முதலீடு செய்யும் போது ஒரே பங்கிலேயே செய்யக்கூடாது.வேறு
    சில பங்குகளிலும் முதலீடு செய்தால் நட்டத்தை குறைக்கலாம் என்று படித்தது நினைவுக்கு வர என்னிடம் இருந்த 2000 ரூபாயை இவ்வாறு பிரித்து முதலீடு செய்தேன்.

    Sathyam --->50 x 28.50 = 1425
    RNRL ------>8 x 52.50 = 420
    GVK -------->7 x 20.80 = 125

    முதலீடு செய்தபின் அவ்வப்போது சந்தை நிலவரத்தைக் கவனித்து வந்தேன். ஏறியும் இறங்கியும் வந்த சந்தை பயமுறுத்தினாலும் கவலைப்படவில்லை. சரியாக ஐந்து மாதம் கழித்து ஓரளவுக்கு எனக்கு லாபம் வந்தபோது June 23 ஆம் தேதி விற்று விட்டேன். ஏனெனில் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் தள்ளிப்போடக் கூடாது. இப்போது எனக்கு கிடைத்த தொகை 5000 ரூபாய்.சத்யம் 80 ரூபாய்க்கு போனதால் எனக்கு இந்த லாபம் கிடைத்தது.அதற்கடுத்து இப்போது சந்தை இறங்கிவிட்டது.

    இதிலிருந்து நான் புரிந்து கொண்டவை என்னவென்றால்,

    1. விலை குறையும் போது வாங்க வேண்டும்.
    அதிகமாகும் போது விற்று விட வேண்டும்.
    2. அதிக லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது.
    3. அவ்வப்போது சந்தை நிலவரத்தை கவனிக்க வேண்டும்.
    4. பங்குச்சந்தை பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
    5. தினசரி வர்த்தகத்தில் உடனே இறங்கக்கூடாது.

    080710093818_Money-Lead-250x250
    அதேபோல SuperTex Industries என்ற பங்கை நீங்கள் வெறும் 1000 ரூபாய்க்கு போன அக்டோபர் மாதத்தில் வாங்கியிருந்தால் இப்போது நீங்கள் ஒரு லட்சத்திற்கு அதிபதி ஆயிருக்கலாம். இதைப்பற்றி பார்க்க . அப்போது இதன் ஒரு பங்கின் விலை 43 காசுகள் . இப்போதோ 53 ரூபாய். எனவே இது 100 மடங்காக உயர்ந்துவிட்டது. இது போல சரியான உத்திகளோடு செய்யல்பட்டால் வெற்றி காண முடியும்.

    தயங்கும் பெண்கள் கூட இப்போது முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .

    தமிழ் இணையதளங்கள் :

    http://pangusanthai.com
    http://panguvaniham.wordpress.com/
    http://sharedirect.blogspot.com/
    http://top10shares.wordpress.com/
    http://stock.tamilsasi.com/
    http://tamilnithi.blogspot.com/
    http://stockintamil.wordpress.com
    http://thoughtsintamil.blogspot.com/
    http://stocksintamil.com
    http://investorarea.blogspot.com/
    http://mayashare.blogspot.com/
    http://krvijayganesh.wordpress.com/
    http://sharehunter.wordpress.com/
    http://kmdfaizal.blogspot.com/
    http://moneybharati.blogspot.com/
    http://sandhainilavaram.blogspot.com/
    http://moneybharati.blogspot.com/
    http://varthagaulagam.blogspot.com/
    http://www.dinamalar.com/business/
    http://dailyindiansharemarket.blogspot.com/
    http://stocksiva.blogspot.com/
    http://mangaloresiva.blogspot.com/
    http://porulsey.blogspot.com/
    http://panguvanigam.blogspot.com/
    http://www.nanayam2007.blogspot.com/
    http://panguvanigamtips.blogspot.com/


    ஆங்கில இணையதளங்கள் :

    http://www.bseindia.com/
    http://www.nseindia.com/
    http://money.rediff.com/
    http://profit.ndtv.com/Home.aspx
    http://www.utvi.com/
    http://www.moneycontrol.com
    http://in.finance.yahoo.com/
    http://www.sudarshanonline.com/
    http://www.appuonline.com/
    http://paisapower.blogspot.com/
    http://www.amfiindia.com/
    http://www.crnindia.com/
    http://finance.tipz.in/
    http://moneybazzar.blogspot.com/
    http://www.mutualfundsindia.com/
    http://www.niftyintra.com/
    http://www.nseguide.com/
    http://www.bazaartrend.com/
    http://www.technicaltrends.com/
    http://www.yourbse.com/
    http://copperbulls.blogspot.com/







    Saturday 18 June 2016

    உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தைச் சம்பாதிக்கலாம்..


    Blog
    நீங்கள் நினைக்கும், கேட்கும், படிக்கும், பார்க்கும் அத்தனை விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தொடங்குங்கள் ஒரு ப்ளாக்கை. அதில் உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் சிந்தனை களையும் கொட்டுங்கள். ப்ளாக் ஆரம்பிப்பது மிகச் சுலபம். ஆங்கிலத்தில்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. தாராளமாக தமிழிலேயே ஆரம்பிக்கலாம். உங்கள் ப்ளாக்குக்கு வரவேற்பு இருக்கும்பட்சத்தில் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் கிடைக்கும். பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே வருமானம் எகிறும்.
    You Tube
    உங்களது திறமை களை வீடியோ படமாக எடுத்து அதை யூ.டியூப்-ல் பதிவு செய்து வெளியிடுங்கள். உங்களது வீடியோவைப் பார்க்க அதிகளவில் பார்வையாளர்கள் வரும்போது விளம்பரங்களும் தேடிவரும். இதற்கு யூ.டியூப்-க்குச் சென்று ஒரு அக்கவுன்ட் ஆரம்பியுங்கள். ஜி-மெயில் அக்கவுன்ட் தொடங்குவது போல இதுவும் சுலபமானதே. நீங்கள் எடுக்கும் வீடியோக்களை அதில் ‘அப்லோட்’ செய்து, அதை நம் வெப்சைட்டிலோ அல்லது ப்ளாக்கிலோ சேர்க்க வேண்டும். இதற்கு விளம்பரங்கள் வர நீங்கள் விரும்பினால் adsense எனும் சைட்டுக்கு சென்று உங்களது யூ.டியூப் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் அவர்கள் தகுதியிருப்பின் விளம்பரங்கள் தருவார்கள். ஃபிளிக்ஸ்யா (flixya) மற்றும் மீடியாஃபிளிக்ஸ் (mediaflix) போன்ற இணையதளங் களில் மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
    புகைப்படங்கள்
    உங்களுக்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் என்றால் அதன் மூலமும் சம்பாதிக்கலாம். .ஃபோடோலியா, ட்ரீம்ஸ்டைம், ஸட்டர்ஸ்டாக் போன்ற புகைப்பட ஏஜென்ஸிகள் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு அதற்குத் தகுந்த தொகையைக் கொடுக்கின்றன.
    மற்றவர்களுக்காகத் தேடுங்கள் (Researching for Other)
    மற்றவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடிக் கொடுப்பது, டிசைன் செய்து கொடுப்பது என ஆன்லைனிலேயே வேலைகளைச் செய்து கொடுக்கலாம். வாரத்தில் கொஞ்ச நேரம் செலவழித்தால் போதும் இதற்கு. பல அமைப்புகள், நிறுவனங்களுக்கு இது போன்ற தகவல்களை ஆன்லைனிலிருந்து தேடிக் கொடுப்பவர்களுக்கு அதற்குத்தகுந்த தொகை கொடுக் கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் இதன் மூலம் எளிதாகச் சம்பாதிக்கலாம்.
    இ-டியூசன்ஸ்
    உங்களுக்கு கற்றுத் தரும் திறமை இருந்தால் இ-டியூசன் மூலம் நிறையவே சம்பாதிக்கலாம். கற்றுத் தருவதில் நீங்கள் எக்ஸ்பர்ட் என்றால் உடனே tutorvista, e-tutor, smartthinking, tutor.comபோன்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களது கற்பிக்கும் திறன் சிறப்பாக இருந்தால் இணையதளத்தில் வெப்பினார் (Webinar) மூலம் செமினார் எடுக்கலாம். மாணவர்கள் நீங்கள் நடத்தும் பாடத்தை வெப்பினார் மூலம் பார்க்க கட்டணம் கட்ட வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆசிரியர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க அரிய வாய்ப்பு.
    அஸிஸ்டென்ட்
    சிறு தொழில் செய்யும் நிறுவனங்களால் பலரை முழு நேர வேலையாட்களாக நியமித்து சம்பளம் தர முடியாது. அப்படிப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தரலாம். இதன் மூலம் கணிசமான பணம் பார்க்கலாம். வேலையில்லா பட்டதாரிகள் இந்த வாய்ப்பை அதிகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    மறுவிற்பனை
    உங்களது இணைய முகவரி யிலோ அல்லது உங்கள் இணைப்பிலிருக்கும் நண்பர்களின் இணையதளத்திலோ பொருட் களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம். அது உங்களின் சொந்தப் பொருளாக தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பிற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் விற்றுத் தந்து, கமிஷன் பெறலாம். நேரமும் தொடர்பும் உள்ள யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்.

    Tuesday 9 February 2016

    இணைய திருடர்களிடமிருந்து (Hackers)தப்பிக்க..!!

    usb keyloggersஇப்போதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தை இந்த 'ஹாக்கிங்' 'ஹாக்கர்ஸ்'.  இணையத்தில் இன்று பரவலாகவே தினம் தினம் ஒரு சிலரது கணக்குகள் களவாடப்படுவது என்பது சாதாரணமாகிவிட்டது. நம்முடைய பர்சனல் கணியிலிருந்து தகவல்களை திருடுவது.. பார்ஸ்வேர்ட்டை திருடி மாற்றுவது.. இன்னும் ரகசிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் அதை திருடி விற்பது இப்படி பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது.

    இத்தகைய இணையவழி திருட்டுக்குத்தான் ஹாக்கிங்(hacking) என்று பெயர்.. இந்த திருட்டை செய்பவர்களுக்கு (Hackers) என்று பெயர்.

    சரி ஹாக், ஹாக்கர்ஸ் என்ற வார்த்தைகளுக்கு விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.

    இப்படிப்பட்ட திருடர்கள் நம்முடைய கணக்கை எப்படி திருடுகின்றனர்? எப்படி நமது சொந்த தகவல்கள் நம்மிடமிருந்து திருடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

    keyloggers என்றொரு மென்பொருள் உள்ளது. இதன் பணி என்ன தெரியுமா? நம்முடைய கணினியில் நாம் உள்ளிடும் பாஸ்வேர்ட்களை சேமித்து அதை ஒரு கோப்பாக மாற்றி மூன்றாம் நபருக்கு அனுப்புவதுதான்.

    இத்தகைய keyloggers இரண்டு வகையில் இருக்கிறது..

    ஒன்று: ஹார்ட்வேர் கீ லாகர்ஸ் (Hardware Keyloggers), 
    இரண்டு: சாப்ட்வேர் கீ லாகர்ஸ் (Hardware Keyloggers)
    சாப்ர்வேர் கீ லாகர்ஸ் என்ன செய்யும் என்றால் நாம் தட்டச்சு செய்யும் எழுத்துக்களை ஒரு கோப்பு வடிவில் சேமித்து , அதை இதற்கு முன்னரே பதிவுசெய்யப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.

    நாம் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட்டை உள்ளிடும்போதும் அது தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும்.. இதனால் நமது பாஸ்வேர்ட்டை எளிதில் மூன்றாம் நபர்கள் கண்டுபிடித்து நமது கணக்கை அழிப்பார்கள்.. அல்லது தவறான வழிகளில் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வார்கள்.

    இத்தகைய கீ லாகர்ஸ்கள் செயல்படும்போது பின்னணியில் taskbar, மற்றும் கண்ட்ரோல் பேனலில் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இம்மென்பொருள் இயங்கும்போது நம்முடைய கணினி திடீரென்று வேகம் குறையலாம். அவ்வாறு குறையும்போது கவனித்தால் அங்கே டாஸ்க்பாரில் ஏதாவது நமக்கு புதியதாக தோற்றமளிக்கும் ஐகானை நிறுத்திவிட வேண்டும்.

    இந்த சாப்ட்வேர் கீலாகர்ஸ் இரண்டு வகையாக இருக்கும்..  1. Remote Keyloggers 2. Physical Keyloggers

    முதலில் குறிப்பிட்ட ரிமோட் கீ லாகர்ஸ் ஆனது நாம் இணையத்தில் ஏதாவது மென்பொருளை தரவிறக்கம் செய்யும்போது அதன் வழியாக நமது கணினியை வந்தடைந்து நமக்குத் தெரியாமலேயே நிறுவப்படக்கூடியது. இத்தகைய மென்பொருள்களை ஒரு குறிப்பிட்ட நபரின் தகவல்களைத்திருடுவதைக் காட்டிலும் பலரின் தகவல்களை பல கணினியில் புகுந்து திருடும் நோக்கத்துடன் பணிக்கப்பட்ட மென்பொருளாகும்.

    இரண்டாவதாக குறிப்பிட்ட பிஸிகல்(Physical)கீ லாகர்ஸ் ஆனது நேரடியாக நமக்குப் பிடிக்காதவர்கள் நமது கணினியில் நிறுவுவது ஆகும். நமது கணினியில் நாம் தட்டும் ஒவ்வொரு விசையும் அவரது மின்னஞ்சலுக்குச் செல்லும்படி அதில் செட் செய்து வைத்திருப்பார்கள்.

    hardware keyloggers
    ஹார்ட்வேர் கீ லாகர்ஸ் நமது கணினியிலேயே ஒரு பகுதியாக பொருளாக இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹார்ட்வேர் கீ லாகர்ஸ் தகவல்களை தன்னிச்சையாக செயல்பட்டு இணையம்வழியாக(Through online) அதனை இணைத்தவருக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும். உருவத்தில் இத்தகைய கனெக்டர்கள் நாம் உபயோகிக்கும் மற்ற பின்களைப் போன்றே இருப்பதால் இதனை நாம் கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சிரமம்தான். நமக்கு வேண்டாதவர்கள் நமது கணினியில் இப்படிப்பட்ட ஹார்ட்வேர் கீ லாகர்ஸ்களை நமக்குத் தெரியாமலேயே இணைத்து வைத்திருக்கலாம்.

    இத்தகைய இணைய திருடர்களிடமிருந்து  (Hackers) தப்பிப்பது எப்படி?


    இவற்றிலிருந்து தப்பிப்பது சற்றே கடினம் என்றாலும் கூட கீழ்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தினால் தவிர்க்கலாம்.

    கீ லாகர்கள் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்துவதன் மூலம் திறப்பதற்குண்டான வழிமுறைகளை கையாளுகிறது.. அதில் கண்ட்ரோல்+ஆல்ட்+கே (Ctrl+alt+shift+k) என்பன போன்ற விசைகளையே பயன்படுத்துகின்றன.  மேற்கண்ட விசைகளை அழுத்துவதன் மூலம் நம்முடைய கணினியில் ஏதாவது கீலாகர்ஸ் நிறுவப்பட்டிருக்கிறாதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.

    அப்படி ஏதாவது மென்பொருள் இருந்தால், புதிதாக ஒரு சன்னல் திரை தோன்றி அதற்குண்டான கடவுச் சொல்லைக் கேட்கும்.  அப்போது நமது கணினியில் கீலாகர்ஸ் நிறுவப்பட்டிருப்பதை நாம் உறுதிப்படுத்தலாம்.

    மற்றுமொரு வழியும் இருக்கிறது.

    அந்த கீ லாகர்ஸ்ஸை நீக்குவதென்றால் ஒரே வழி நமது Hard Dick-ஐ பார்மேட் செய்வது ஒன்றுதான் சிறந்ததும், இறுதியான வழியும் ஆகும்.

    அதேபோல் நமது கணினியின் பயர்வால் Enable செய்யப்படுவதன் மூலம் ஓரளவிற்கு இணையத்தின் வழியே தகவல்கள் திருடப்படுவதை ஓரளவிற்கு (90%) தடுக்க முடியும்.

    ஒரு ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர்கள் கூட இத்தகைய கீ லாகரை காட்டிக்கொடுக்கும்.. பெரும்பாலான Antivirus software கள் இந்த விஷயத்தில் உதவாது என்பதே உண்மை.
    இதில் AVG Antivirus ஓரளவுக்கு இத்தகைய திருட்டு மென்பொருளை காட்டிக்கொடுக்கிறது.

    மற்றவைகள் அப்படி செய்வதாக தெரியவில்லை. திருட்டுத்தனமாக நாம் தரவிறக்கும் எந்த  செய்யும் எந்த ஒரு மென்பொருளிலும் இத்தகைய ஆபத்து விளைவுக்கும் மென்பொருள்கள் இருக்க அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.

    அதுபோலவே பொது இடத்தில் பாஸ்வேர்ட்களை பகிர்ந்துகொள்வது, நண்பர்களிடம் சொல்வது கூட ஒரு வகையில் ஆபத்தானதுதான்.. பாஸ்வேர்ட்கான  ரகசிய கேள்கள் பொதுவானதாக இருக்க வேண்டும்.. டேட் ஆப் பர்த். பிடித்த நிறம், வண்டியின் பதிவு எண்.. இப்படி.. நிச்சயமாய் நம்முடைய இரசிகய கேள்விகளை வைத்திருந்தோமானால் நிச்சயம் நம்முடைய கணக்கை களவாடி நம்முடைய இணைய வாழ்க்கையில் விளையாடியும் விடுவார்கள் இத்தகைய இணைய திருடர்கள்..!!

    அதேமாதிரி நாம் உள்ளிடும் பாஸ்வேர்ட்களை பாதி உள்ளிட்டுவிட்டு அதற்கு மேல் இரண்டொரு எழுத்துக்கள் தவறாகவோ அல்லது கூடுதலாகவோ உள்ளிட்டு அதை காப்பி செய்துகொண்டு மீண்டும் சரியான பாஸ்வேர்ட்டை உள்ளிடுவதன் மூலம் கீ லாகர்களுக்கு நம்முடைய முழுமையான பாஸ்வேர்டை கிடைக்காமல் செய்யலாம்..

    எனவே நண்பர்களே.. நம்முடைய பாஸ்வேர்ட்களை அமைப்பதிலும் நாம் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொண்டு நமக்கு மட்டுமே தெரிந்த எண்ணும் எழுத்தும், சிறப்பு குறியீடுகளும் கொண்ட பாஸ்வேர்ட்களை அமைப்போம்.

    Popular post